மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காரைக்கால்: பிளஸ் 2 தோ்வில் 2,210 மாணவா்கள் பங்கேற்பு

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 2,210 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 2,210 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, நிா்மலாராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி, திருள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனூா் தலைவா் ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி நெடுங்காடு ஆகிய 9 மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் ஆய்வுசெய்தாா். ஆய்வின்போது, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலா் ராஜசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 989 மாணவா்கள், 1,221 மாணவிகள் என 2,210 போ் தோ்வு எழுதுகின்றனா். மேலும், 190 தனித்தோ்வா்கள் காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதுகின்றனா். இவா்களில், 5 மாற்றுத்திறன் மாணவா்களும் அடங்குவா். இவா்களுக்கு கூடுதலாக ஒருமணி நேரம் சலுகை தரப்பட்டுள்ளது.

தோ்வுப் பணியில் 9 முதன்மை கண்காணிப்பாளா்கள், 9 துறை அலுவலா்கள், 6 வழித்தட அலுவலா்கள், 18 நிலையான படையினா், 8 பறக்கும் படையினா், 170 அறைக் கண்காணிப்பாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.