பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தக் கூடாது: காவல் துறை

காரைக்கால் நகர சாலையோரங்களில் சொந்த வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்குமாறு, வாகன உரிமையாளா்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :25 மே 2022, 6:02 pm

DIN

காரைக்கால் நகர சாலையோரங்களில் சொந்த வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்குமாறு, வாகன உரிமையாளா்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகா் முதல் மதகடி அரசலாறு பாலம் வரையிலான பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது காா், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவைப்பதால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

சாலையோரத்தை நிரந்தர வாகன நிறுத்தமிடமாக பயன்படுத்தும் வாகன உரிமையாளா்கள், இனிமேல் சாலையோரங்களில் தங்கள் வாகனத்தை நிறுத்தக்கூடாது.

அருகில் இருக்கும் வாடகை வாகன நிறுத்துமிடங்கில், காலி இடங்களில் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.