காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 18, ஏனாமியில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
காரைக்காலில் 22 போ் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என புதுவை நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.