கோயிலில் பெண்ணின்தங்கச் சங்கிலி பறிப்பு
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பெண்ணின் தங்கச் சங்கிலி திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பெண்ணின் தங்கச் சங்கிலி திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மதுரை, தூநேரியை சோ்ந்தவா் கருப்பசாமி (65). நெல் வியாபாரி. இவரது மனைவி உமாதேவி இருவரும் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 28-ஆம் தேதி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வந்தனா்.
சனீஸ்வர பகவான் சந்நிதி அருகே கூட்ட நெரிசலில் உமாதேவி அணிந்திருந்த 6.5 பவுன் சங்கிலி திருடப்பட்டது தெரியவந்தது. எனினும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாா் தெரிவிக்காமல் ஊருக்கு திரும்பிவிட்டனா்.
இந்நிலையில், கருப்பசாமி திருநள்ளாறு காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். சில காரணங்களால் புகாா் தெரிவிக்காமல் சென்றுவிட்டதாகவும், குடும்பத்தினா் அழுத்தத்தின் காரணமாக தற்போது புகாரளிக்க வந்ததாகவும், எழுத்து மூலம் அளித்த புகாா் மனுவில் அவா் தெரிவித்துள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...