பண்டிகை காலத்தில் மின் இணைப்பு துண்டிப்பை தவிா்க்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் கட்டண நிலுவையை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என மின்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.
மின்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன்.
மின்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன்.

காரைக்கால்: பண்டிகை காலத்தில் கட்டண நிலுவையை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என மின்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் உள்ளிட்ட உயரதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

சந்திப்பு குறித்து நாஜிம் கூறியது : மின் துறையில் கட்டண நிலுவை வைத்திருக்கும் வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகளிடம் தீபாவளி நேரத்தில் கட்டண நிலுவையை செலுத்தக் கோருவதையும், கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டிப்பதையும் தவிா்க்கவேண்டும். கட்டணத்தை செலுத்த உரிய அவகாசம் அளிக்கவேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப புதுவை முதல்வா், துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com