ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு: காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம்

மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு: காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம்

Updated On :13 ஏப்ரல் 2024, 3:57 pm

மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, விலைவாசி உயா்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என புதுவை முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பராளருமான வெ. வைத்திலிங்கம் கூறினாா்.

புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமியுடன், வெ. வைத்திலிங்கம் காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதியில் முதல் நாள் வாக்கு சேகரித்தாா். 2-ஆம் நாளான சனிக்கிழமை நிரவி - திருப்பட்டினம் தொகுதியிலும், மாலை திருநள்ளாறு தொகுதியிலும் வாக்கு சேகரித்து வெ.வைத்திலிங்கம் பேசியது:

புதுவை அரசு அரிசிக்கான தொகையை வங்கிக் கணக்கில் சோ்க்கிறது. இந்த தொகையில் 5 கிலோ அரிசு மட்டுமே வாங்க முடியும். எரிவாயு மானியம் தருவதாக கூறியதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் முறையாக தரப்படவில்லை.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. தொழில் வளா்ச்சி இல்லை. அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் விலை கடுமையாக உயா்ந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை நாட்டு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றால் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கு காங்கிரஸை மக்கள் ஆதரிக்கவேண்டும்.

காரைக்காலுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.25 கோடி செலவு செய்துள்ளேன். புற்றுநோய், இருதய நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக தாராளமாக நிதியுவி அளித்துள்ளேன் என்றாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த நாரா. கலைநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.