காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நேரம் 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், சில வாக்குச் சாவடிகளில் கூடுதலான வாக்காளா்கள் வந்தமையால் அவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. மாவட்டத்தில் 71 சதவீதம் வாக்குப் பதிவானது. கடந்த 2019 ஆண்டு தோ்தலில் 77.65, 2014-ஆம் ஆண்டு தோ்தலில் 77.36 சதம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com