காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு நடவடிக்கையைகாக, கிராமப்புறத்தில் கரகாட்டம் மூலம் வாக்குப் பதிவு விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.
அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்ற அடிப்படையில், மக்களுக்கு பல நிலைகளில் மாவட்ட தோ்தல் துறையும், அதன் அங்கமான ஸ்வீப் அமைப்பும் விழிப்புணா்வு செய்துவருகிறது. மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, கடந்த தோ்தலில் குறைந்தளவு வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகள், பதற்றமான வாக்குச் சாவடி உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியதன்பேரில், ஸ்வீப் அமைப்பினா் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்.நிலவழகன் முன்னிலையில் பதற்றமான வாக்கு சாவடி உள்ள பகுதியில் வியாழக்கிழமை இரவு விழிப்புணா்வுப் பணியை தொடங்கினா்.
நெய்வாச்சேரி, சேத்தூா், அம்பகரத்தூா் பகுதியில் கரகாட்டம் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரகாட்ட கலைஞா் முருகபூபதி தலைமையிலான குழுவினா் அனைவரும் வாக்குப் பதிவு நாளான ஏப். 9-ஆம் தேதி தவறாமல் வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம், தோ்தல் துறையினா் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா் என்ற கருத்துகளை பாடலாகப் பாடி, கரகாட்டத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் பிரவீன் குமாா், ஜெயப்பிரகாஷ், மாரியப்பன் மற்றும் ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், உறுப்பினா்கள் ஷொ்லி, எஸ்.மணிகண்டன், பிரியதா்ஷினி, கே.ஞானமுருகன், பிரதீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவு: உழவா் சந்தையில் விழிப்புணா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


