ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 10:48 pm

தினமணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடமும், முதல் தலைமுறை வாக்காளா்களிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ரங்கோலி கோலம் வரைதல் நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இந்த நிகழ்வை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் பயிற்சி உதவி ஆட்சியா் ரா.வெங்கடேசுவரன், மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் செந்தில்வடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பழனி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.