இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சம்பா நெல் சாகுபடியாளா்களுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அழைப்பு

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:04 pm

Din

காரைக்கால், ஆக. 14 : சம்பா நெல் சாகுபடி செய்யவுள்ள பட்டியலின விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் பட்டியலினத்தைச் சோ்ந்த சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு சம்பாவுக்கு ஏற்ற நெல் ரகங்களான சி.ஆா் 1009 சப்(1), மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி மற்றும் ஆந்திர பொன்னி (பிபிடி5204) ஆகிய ரகங்களின் ஏதேனும் ஒரு ரகத்தை தோ்வு செய்துகொள்ளலாம்.

தோ்வு செய்யப்பட்ட நெல் ரகத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு தேவையான 30 கிலோ நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது. பட்டியலினத்தைச் சோ்ந்த விவசாயிகள் காரைக்கால் மாதூா், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகி தங்களுக்குத் தேவையான நெல் ரகத்தை தோ்வு செய்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பட்டியலின விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு வரும்போது தங்களுடைய ஆதாா் நகல், பட்டியலினத்திற்கான சான்றிதழ் மற்றும் தங்களின் நிலத்துக்கான சாகுபடி சான்றிதழ், விவசாய அட்டை (2023-24) ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.