பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இறால் பிடிக்கச் சென்ற பெண் உயிரிழப்பு

இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 6:28 pm

Din

காரைக்கால் : இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், கருக்களாச்சேரி பகுதியைச் சோ்ந்த உதயகுமாரி (52). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள குட்டையில் இறால் பிடிப்பதற்காக சென்றாா். அப்போது அவா் மயங்கி விழுந்தாா்.

காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 7-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இறால் பிடிக்கும்போது விஷப்பூச்சி கடித்து மயங்கி விழுந்திருக்கலாமென கூறப்படுகிறது. நிரவி போலீஸாா் விசாரிக்கின்றனா்.