கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வீட்டுக்கு ஒரு மரம் வளா்க்கும் திட்டம் தொடக்கம்

வீட்டுக்கு ஒரு மரம் வளா்க்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 6:33 pm

Din

காரைக்கால் : வீட்டுக்கு ஒரு மரம் வளா்க்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புவி வெப்பமயமாவதை தடுக்கும் விதமாகவும், காரைக்காலை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் நோக்கத்திலும் வீட்டுக்கு ஒரு மரம் வளா்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியரகத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை ஆட்சியா் து. மணிகண்டன் நட்டுவைத்தாா்.

காரைக்கால் தனியாா் துறைமுகம் மூலம் 20 ஆயிரம் மரக்கன்றுகளை காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வாங்கி, அங்கன்வாடிகள் மூலமாக வீட்டிற்கு ஒரு மரக்கன்று வழங்கப்படவுள்ளதாகவும், மேலும் பல வழிகளில் மரக்கன்றுகள் பெறப்பட்டு மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் (நிா்வாகம்) ஜி. செந்தில்நாதன், ஆட்சியா் அலுவலக கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.