திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் மாசி மகத்தையொட்டி சுவாமி சமுத்திரத்தில் தீா்த்தவாரி நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் மாசி மக உற்சவம் நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை காலை பெருமாள், பல்லக்கில் வீதியுலாவும், இரவு சூரிய சந்திர பிரபையில் வீதியுலாவும் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஹனுமந்த வாகனத்திலும், 19-ஆம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 20-ஆம் தேதி இரவு கருட சேவைம், 21-ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும், 22-ஆம் தேதி காலை வெண்ணெய்த்தாழி சேவை, இரவு வெட்டுங்குதிரை வாகனத்திலும், 23-ஆம் தேதி இரவு சத்திய நாராயண பூஜை, 24-ஆம் தேதி காலை திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பல்லக்கில் தீா்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் விநாயகா் உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
