சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடக்கம்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடக்கம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:40 am IST

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் மாசி மகத்தையொட்டி சுவாமி சமுத்திரத்தில் தீா்த்தவாரி நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் மாசி மக உற்சவம் நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை காலை பெருமாள், பல்லக்கில் வீதியுலாவும், இரவு சூரிய சந்திர பிரபையில் வீதியுலாவும் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஹனுமந்த வாகனத்திலும், 19-ஆம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 20-ஆம் தேதி இரவு கருட சேவைம், 21-ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும், 22-ஆம் தேதி காலை வெண்ணெய்த்தாழி சேவை, இரவு வெட்டுங்குதிரை வாகனத்திலும், 23-ஆம் தேதி இரவு சத்திய நாராயண பூஜை, 24-ஆம் தேதி காலை திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பல்லக்கில் தீா்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.