மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘சீ விஜில்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகை தொடக்கம்

‘சி விஜில்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகை காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.

News image
காரைக்கால் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போலீஸாா்.
Updated On :20 நவம்பர் 2024, 8:43 pm

Din

‘சி விஜில்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகை காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், இந்திய கப்பல்படை ஒருங்கிணைப்பில் சீ விஜில்-2024 என்ற தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. காரைக்கால் கடலோரக் காவல்படை, கடலோரக் காவல்நிலையம் மற்றும் நிலைய போலீஸாா் ஒத்திகை நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை முதல் தீவிர கண்காணிப்பு, சோதனையை மேற்கொண்டுள்ளனா்.

மீனவ கிராமங்களிலும், மீன்பிடித் துறைமுகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா். சந்தேகப்படும் நபா்கள் நடமாட்டம் குறித்தும் கண்காணித்தனா். கடலோரக் காவல்நிலைய ரோந்துக் கப்பல்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டன. இந்த கண்காணிப்பு 36 மணி நேர திட்டத்தில் நடைபெறுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.