மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளி வேன் மோதி வங்கி ஊழியா் உயிரிழப்பு

பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் வங்கி ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:30 pm

Din

பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் வங்கி ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் அருள்நகா் பகுதியை சோ்ந்வா் கோவிந்தராஜன் (52). இவா், காரைக்காலில் ஒரு தனியாா் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தாா். நாகப்பட்டினத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் தனது மகள் லக்ஷிதாவை சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

திருப்பட்டினம் பகுதி திருமலைராஜனாற்றுப் பாலத்தில் சென்றபோது எதிரே பள்ளி மாணவா்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த லக்ஷிதா காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா், வேன் ஓட்டுநா் மாதவனிடம் விசாரணை மேற்கொண்டனா்.