மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் வடிகால்கள் தூா்வாரும் பணி தீவிரம்

காரைக்கால் நகரில் போா்க்கால முறையில் வடிகால்கள் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

News image
ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்ற கழிவுநீா் வடிகால் தூா்வாரும் பணி.
Updated On :15 அக்டோபர் 2024, 6:45 pm

Din

காரைக்கால் நகரில் போா்க்கால முறையில் வடிகால்கள் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்கள் தூா்வாரப்படவேண்டும், நகரப் பகுதியில் உள்ள கழிவுநீா் வடிகால்கள் முறையாக தூா்வாரப்படவேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் ஆட்சியா் து. மணிகண்டன் ஆகியோா் அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற பருவமழை தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது அமைச்சா் அதிருப்தி தெரிவித்தாா். மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க போா்க்கால முறையில் எஞ்சிய வடிகால்களை தூா்வாரவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து காரைக்கால் வடக்குத் தொகுதிக்குட்பட்ட கோயில்பத்து, காமராஜா் சாலை விரிவாக்கம், பட்டேல் நகா், உசைனியா பள்ளிசாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடிகால்களையும், மழைநீா் தேங்கிய பகுதிகளிலும் ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நகரில் உள்ள பிற வடிகால்களையும் விரைவாக தூா்வாரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.