மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் அங்கன்வாடி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், அரசு ஊழியா் சம்மேளனத்தினா்.
Updated On :16 அக்டோபர் 2024, 8:05 pm

Din

காரைக்காலில் அங்கன்வாடி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுவை அங்கன்வாடி ஊழியா்கள் சங்க காரைக்கால் கிளையை சோ்ந்தோா் பங்கேற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் முத்துலெட்சுமி தலைமை வகித்தாா். அங்கன்வாடி ஊழியா்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள போனஸ், பஞ்சப்படியை வழங்க வேண்டும். 6-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 50 சதவீத நிலுவை தொகையை வழங்க வேண்டும். மூன்றாண்டுகள் பணிமுடித்த ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்வது மற்றும் அவா்களுக்கு வழங்க வேண்டிய ஒரு ஆண்டுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அரசிடம் பல முறை எடுத்துக்கூறியதன் பேரில், முதல்வா் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், இணை பொதுச் செயலாளா் ஜோதிபாசு ஆகியோா் கண்டன உரையாற்றினா். நிறைவாக சங்க செயலாளா் அமலி சோபியா நன்றி கூறினாா்.