தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலைகளில் திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:10 pm

Din

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து ஏலம் விடப்படும் என்றும், அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

காரைக்கால் நகராட்சி ஆணையா் பி. சத்யா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்காலில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. மழைக்காலமாக உள்ள நிலையில் இவை தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன. சாலைகளில் வாகனங்களில் செல்வோா் இதனால் விபத்துக்குள்ளாகின்றனா்.

கால்நடை உரிமையாளா்கள் அனைவரும் தங்களது கால்நடைகளை, தங்களது பராமரிப்பிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். மக்களின் உயிரை காக்க ஒத்துழைப்பு தரவேண்டும்.

மீறுவோா்மீது நகராட்சி விதிகளின்படி, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன், பிடிபட்ட கால்நடைகளை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.