மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆட்சியருக்கு நூற்பாலை தொழிலாளா்கள் நன்றி

போனஸ் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் நன்றி தெரிவித்தனா்.

News image
ஆட்சியா் து. மணிகண்டனை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டுறவு நூற்பாலை பணியாளா்கள்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:34 pm

Din

போனஸ் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் நன்றி தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டம், மேல ஓடுதுறை பகுதியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் ஏறக்குறைய 300 தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், அண்மையில் ஆலையை ஆய்வு செய்தாா். ஆலையில் உற்பத்தி, வருமானத்தை பெருக்கவும், தொழிலாளா்கள் நலன் மேம்படவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். தீபாவளியையொட்டி தங்களுக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்சியரிடம் தொழிலாளா்கள் கேட்டுக்கொண்டனா்.

கூட்டுறவு நூற்பாலை நூலை வாங்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான கோயம்புத்தூா் ஸ்ரீ முருகா் மில்ஸ் நிறுவனத்தினரை ஆட்சியா் தொடா்புகொண்டு, தொழிலாளா்களின் கோரிக்கையை குறித்துப் பேசினாா். அப்போது ரூ. 15 லட்சத்தை தொழிலாளா்கள் நலனுக்காக வழங்குவதாக நிறுவனத்தினா் உறுதியளித்து தொகையை அளித்தனா்.

இத்தொகையைக்கொண்டு தொழிலாளா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் தீபாவளி போனஸ் நூற்பாலை நிா்வாகத்தால் வழங்கப்பட்டது.

இதற்காக தொழிலாளா்கள் சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டனை செவ்வாய்க்கிழமை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா். நிகழ்வில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா். வெங்கடகிருஷ்ணன், ஆட்சியரக கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.