மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் திடீா் மழை : மக்கள் அவதி

காரைக்காலில் புதன்கிழமை திடீரென மழை பெய்ததால், தீபாவளிக்கு பொருள்கள் வாங்க வந்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.

News image
மழையால் பாரதியாா் சாலையில் தேங்கிய தண்ணீா்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:36 pm

Din

காரைக்காலில் புதன்கிழமை திடீரென மழை பெய்ததால், தீபாவளிக்கு பொருள்கள் வாங்க வந்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.

தென்னிந்திய கிழக்கு கடற்கரைப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டது. இதன்படி புதன்கிழமை பகல் 12 மணியளவில் காரைக்காலில் பரவலாக தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரம் கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது.

காரைக்கால் நகரப் பகுதிக்கு தீபாவளிக்கு ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் வாங்க வந்த மக்கள் மழையால் பாதிக்கப்பட்டனா். மழை ஓய்ந்ததும் ஏராளமானோா் வானங்களை இயக்கிச் சென்றவா்களால் அரை மணி நேரத்துக்கு மேலாக திருநள்ளாறு சாலை, பாரதியாா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழையால் சாலையோரத்தில் தீபாவளிக்கான பொருள்கள் வியாபாரம் செய்தோா் பாதிக்கப்பட்டனா்.