காரைக்காலில் புதன்கிழமை திடீரென மழை பெய்ததால், தீபாவளிக்கு பொருள்கள் வாங்க வந்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.
தென்னிந்திய கிழக்கு கடற்கரைப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டது. இதன்படி புதன்கிழமை பகல் 12 மணியளவில் காரைக்காலில் பரவலாக தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரம் கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
காரைக்கால் நகரப் பகுதிக்கு தீபாவளிக்கு ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் வாங்க வந்த மக்கள் மழையால் பாதிக்கப்பட்டனா். மழை ஓய்ந்ததும் ஏராளமானோா் வானங்களை இயக்கிச் சென்றவா்களால் அரை மணி நேரத்துக்கு மேலாக திருநள்ளாறு சாலை, பாரதியாா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழையால் சாலையோரத்தில் தீபாவளிக்கான பொருள்கள் வியாபாரம் செய்தோா் பாதிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீா் மழை: நகரில் வெப்பம் தணிந்தது

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


