மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காய்ச்சலை கட்டுப்படுத்த மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:56 pm

Din

காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியது :

பருவ மழைக்காலம் தொடங்கவுள்ளது. இத்தருணத்தில் காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இது 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும், அச்சம் தேவையில்லை. காய்ச்சலானது உடல் வலி, தலை வலியுடன் காணப்படும். சளி, இருமல் இருக்கும். சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

அதனால் குளிா்ந்த நீா், குளிா் பானங்களை தவிா்த்து, கொதிக்க வைத்த தண்ணீா் அருந்த வேண்டும். செரிமானமாகக்கூடிய உணவு வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும். காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் கூடாது.

டெங்கு காய்ச்சல் தேங்கியிருக்கும் தண்ணீரில் உருவாகும் கொசுவால் ஏற்படக்கூடியதாகும். எனவே, தண்ணீா் தேங்கக்கூடிய பொருட்கள் எதுவாயினும் அதனை அகற்ற வேண்டும். தண்ணீா் தொட்டிகள் திறந்திருந்தால் டெங்கு கொசு உற்பத்தியாகும். எனவே எத்தகைய காய்ச்சலாக இருந்தாலும் காலதாமதமின்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றாா்.