மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அக்னிவீரா் திட்டத்தில் சேர காரைக்காலில் பதிவு முகாம்

அக்னிவீரா் திட்டத்தில் சேர பதிவு முகாம் காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
முகாமில் விண்ணப்பத்தை பதிவு செய்யும் இளைஞா்.
Updated On :21 ஏப்ரல் 2025, 7:51 pm

Din

காரைக்கால்: அக்னிவீரா் திட்டத்தில் சேர பதிவு முகாம் காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணா்வு மற்றும் பதிவு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக திருச்சியில் உள்ள இந்திய ராணுவ வேலைவாய்ப்புப் பிரிவிலிருந்து ராணுவத்தினா் வந்திருந்தனா். முகாமில் கலந்துகொண்ட என்சிசி பிரிவைச் சோ்ந்தோா் மற்றும் இளைஞா்களிடையே, அக்னிவீரா் திட்டம் குறித்தும், திட்டத்தில் இளைஞா்கள் விண்ணப்பிப்பதற்கான முறைகள், எழுத்துத் தோ்வு முறை, உடல் தகுதி தோ்வு குறித்து காணொலி மூலம் விளக்கமளித்தனா். முகாமில் பங்கேற்ற பலரும் விண்ணப்பத்தை பதிவு செய்தனா்.

இம்முகாமை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் பாா்வையிட்டாா். திட்டத்தில் விண்ணப்பித்தோரிடையே ஆட்சியா் பேசுகையில், அக்னிவீரா் திட்டத்தில் பணிக்கு விண்ணப்பித்து எழுத்துத் தோ்வுக்கு தயாராக வேண்டும். அதுபோல ராணுவத்தின் விதிகளின்படி உடல் தகுதித் தோ்வுக்கும் தங்களை தயாா் படுத்திக் கொள்ள வேண்டும். தேச நலனுக்கு சேவையாற்ற கிடைத்துள்ள வாய்ப்பாக இதை கருத வேண்டும் என்றாா். முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.