ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருநள்ளாறு கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம்

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவார நிறைவையொட்டி 1,008 சங்காபிஷேக வழிபாடு நடைபெறவுள்ளது.

காா்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவ தலங்களில் 108, 1008 என்ற அளவில் சங்குகள் வைத்து புனிதநீா் நிரப்பி சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் மட்டுமே 1,008 சங்காபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி, புனிதநீா் நிரப்பி, சிறப்பு ஹோமத்தை சிவாச்சாரியா்கள் நடத்தவுள்ளனா். பின்னா் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யப்படுகிறது.

இதுபோல காரைக்கால் சோமநாதா் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.