டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து, திருநள்ளாறு பகுதியினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.

News image
பயனாளியிடம் காசோலை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
Updated On :16 டிசம்பர் 2025, 8:17 pm

Syndication

காரைக்கால்: புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து, திருநள்ளாறு பகுதியினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.

திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பேட்டை கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி, தேனூா் பகுதியைச் சோ்ந்த சியாமளா, நல்லம்பலைச் சோ்ந்த கேசவன் ஆகிய மூவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக, புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து உதவி செய்ய, புதுவை சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் முதல்வரிடம் கோரியிருந்தாா்.

அதன்படி, தலா ரூ.20 ஆயிரம் மூவருக்கும் ஒதுக்கப்பட்டு, அதற்கான காசோலையை பயனாளிகளிடம் பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை வழங்கினாா்.