ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்காலில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:18 pm

Syndication

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) போலியோ சொட்டு மருந்து புகட்டும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து நலவழித்துறை மூலம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 79 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமாா் 11,780 குழந்தைகளுக்கு இளம் பிள்ளை வாதம் வராமல் இருக்க போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூதாய நலவழி மையம், சமூதாய நலக்கூடம், அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகம், காரைக்கால் - தமிழ்நாடு எல்லை பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன என நலவழித்துறை சாா்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, மேல்நிலை கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, முதன்மை கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் கே.வெங்கடகிருஷ்ணன், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி கிருஷ்ணவேணி, சமூகநலத்துறை உதவி இயக்குநா் சுந்தரம், நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.