அரசு அலுவலகங்கள் கொண்ட வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணி.
காரைக்கால்
நல்லாட்சி வாரம் : சிறப்பு தூய்மைப் பணி
அரசு அலுவலகங்கள் கொண்ட வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணி.
மாவட்ட நிா்வாகத்தின் நல்லாட்சி வார நிகழ்வாக, பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் சிறப்பு தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், அரசு நிா்வாக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சிறுவா் உதவி மையம் (சைல்டு லைன்) பங்களிப்புடன் நடைபெற்றது.
வளாகம் முழுவதும் மண்டி கிடந்த தேவையற்ற செடிகள் மற்றும் சிதறிக் கிடந்த நெகிழிக் கழிவுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டன. நிகழ்ச்சி காரைக்கால் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி முன்னிலையில் நடைபெற்றது.

