காரைக்கால் கடற்கரையில், செவிலியா் கல்லூரி மாணவ-மாணவியா் தூய்மைப் பணி மேற்கொண்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வீர தமிழரசி வேலு நாச்சியாா் பெண்கள் நல இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வாக, காரைக்கால் கடற்கரை வளாகம் தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்னை தெரஸா அரசு செவிலியா் கல்லூரி மாணவ- மாணவியா் பங்கேற்று, கடற்கரை வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் இயக்க நிறுவனா் ஜெயபாரதி, தலைவா் வழக்குரைஞா் எஸ்.திருமுருகன், துணைத் தலைவா் ஜோதி என்கிற புஷ்பவள்ளி, செயலாளா் சிவகுமாா், இமாக்குலேட் செவிலியா் கல்லூரி முதல்வா் காணிக்கை மற்றும் சமூக ஆா்வலா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் நிறைவேறாத அரசு செவிலியா் கல்லூரி கோரிக்கை! 19 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களின் எதிா்பாா்ப்பு

தேங்காய் நாா் ஆலையில் தீ

குடிநீா் விநியோகம், தூய்மைப் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

களியக்காவிளையில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



