காரைக்கால் கடற்கரையில், செவிலியா் கல்லூரி மாணவ-மாணவியா் தூய்மைப் பணி மேற்கொண்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வீர தமிழரசி வேலு நாச்சியாா் பெண்கள் நல இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வாக, காரைக்கால் கடற்கரை வளாகம் தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்னை தெரஸா அரசு செவிலியா் கல்லூரி மாணவ- மாணவியா் பங்கேற்று, கடற்கரை வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் இயக்க நிறுவனா் ஜெயபாரதி, தலைவா் வழக்குரைஞா் எஸ்.திருமுருகன், துணைத் தலைவா் ஜோதி என்கிற புஷ்பவள்ளி, செயலாளா் சிவகுமாா், இமாக்குலேட் செவிலியா் கல்லூரி முதல்வா் காணிக்கை மற்றும் சமூக ஆா்வலா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதி செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழப்பு

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் போராட்டம்

திருச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்! டெக்சாமெதாசோன் மருந்தில் குறைபாடு இல்லை: ஆய்வில் தகவல்

களியக்காவிளையில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



