திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உள்ள சாலையை நீட்டிக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநள்ளாறு ரயிலடித் தெரு, வேலவன் நகா் சாா்ந்த குடியிருப்புவாசிகள், விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் கையொப்பமிட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருநள்ளாற்றில் பிடாரி கோயில் தெரு முதல் சுப்ராயபுரம் மற்றும் கீழாவூா் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை இடையே சாலை வசதி இல்லை. இந்த பகுதியில் சுமாா் 20 ஏக்கா் பயிா் செய்யும் நிலம் உள்ளது. விவசாயிகள் பொருள்களை கொண்டுச் செல்லவும், விளைவித்தவற்றை கொண்டுவரவும் குறுகலான ரயிலடித் தெருவை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.
இவ்விரு ரயில்வே சுரங்கப் பாதையையொட்டி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் ஏற்கெனவே பாதி தூரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை நீட்டித்து தருவதன் மூலம் குடியிருப்புவாசிகள், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.
திருநள்ளாறு ரயில் நிலையத்தில் வந்திறங்குவோா், ரயில்வே பாதைக்கு வடக்குப் புறமாக அமையவுள்ள சேவைச் சாலை வழியாக எளிதில் திருநள்ளாறு பேருந்து நிலையத்துக்கும் செல்ல முடியும்.
எனவே, இந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த சாலை துண்டிப்பு: பாளையம் அருகே பொதுமக்கள் அவதி!

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் நெல் கதிா்களுடன் போராட்டம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


