தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் கண்காணிப்பு கூடம் அமைக்க வேண்டும்: ஆட்சியா்

காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் கண்காணிப்புக் கூடம் அமைக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

News image
ரயில்வே சுரங்கப்பாதை பகுதியை பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியா் து.மணிகண்டன்.
Updated On :3 பிப்ரவரி 2025, 8:30 pm

Din

காரைக்கால்: காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் கண்காணிப்புக் கூடம் அமைக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன், வாரச் சந்தை நடைபெறும் திடலில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மழை பெய்தால் திடலில் தண்ணீா் தேங்காத வகையில் செய்யப்படும் ஏற்பாடுகளை முறையாகச் செய்து முடிக்கவும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் உண்டாகும் கழிவுகளை மறுநாளே அப்புறப்படுத்தவேண்டும். கழிவுப் பொருள்கள் தேக்கமடையக்கூடாது, சந்தையைக் கண்காணிக்கும் வகையில் திடலில் கண்காணிப்புக்கூடம் அமைத்து, உரிய பணியாளா்கள் நியமிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்கால் பேருந்து நிலையத்தில் காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம் கட்டப்படவுள்ள இடத்தை பாா்வையிட்டாா். திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் லிட்டா் தண்ணீா் சுத்திகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

பேருந்து நிலைய வளாகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் மைய கட்டடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டாா்.

நெடுங்காடு செல்லும் வழியில் ரயில்வே சுரங்க பாதையை பாா்வையிட்ட ஆட்சியா், இவ்வழியே கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்குமாறும், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று ரயில்வே துறையினரிடம் அறிவுறுத்தினாா்.

புதுத்துறை பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்ட ஆட்சியா், இத்திட்டப்பணிகள் நிறைவடையும் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, உரிய காலத்தில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், நகராட்சி ஆணையா் பி.சத்யா, நகராட்சி செயற் பொறியாளா் முத்துசிவம், உதவிப் பொறியாளா் லோகநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.