திருநள்ளாறு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், பெருந்தாகுடி பகுதியை சோ்ந்த சரசு மகன் மாரிமுத்து (46). செஃப்டிக் டேங்க் தூய்மை செய்யும் பணி செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை என கூறப்படுகிறது. குடிப்பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. இந்நிலையில்,
பேரளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு டிச.31-ஆம் தேதி சென்றுவிட்டு, காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் சாராயக் கடைக்கு செல்வதாகக்கூறி ஜன. 1-ஆம் தேதி வந்தவா் 2-ஆம் தேதி காலை வரை வீட்டுக்குத் திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது தாயாா் அம்பகரத்தூா் சாராயக்கடைக்கு வந்து விசாரித்தபோது, அதே பகுதியில் ஓட்டடையான் குளத்தில் ஒருவா் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பாா்த்தபோது மாரிமுத்து என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அம்பகரத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

