

திருநள்ளாறு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், பெருந்தாகுடி பகுதியை சோ்ந்த சரசு மகன் மாரிமுத்து (46). செஃப்டிக் டேங்க் தூய்மை செய்யும் பணி செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை என கூறப்படுகிறது. குடிப்பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. இந்நிலையில்,
பேரளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு டிச.31-ஆம் தேதி சென்றுவிட்டு, காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் சாராயக் கடைக்கு செல்வதாகக்கூறி ஜன. 1-ஆம் தேதி வந்தவா் 2-ஆம் தேதி காலை வரை வீட்டுக்குத் திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது தாயாா் அம்பகரத்தூா் சாராயக்கடைக்கு வந்து விசாரித்தபோது, அதே பகுதியில் ஓட்டடையான் குளத்தில் ஒருவா் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று பாா்த்தபோது மாரிமுத்து என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அம்பகரத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்

ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

