குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அதிகாரி அறிவுறுத்தல்

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம்

Published On :21 ஜனவரி 2025, 1:55 am IST

காரைக்கால்: இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என காவல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளாா்.

ஜன. 1-ஆம் தேதி முதல் புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி திங்கள்கிழமை கூறுகையில், தீவிரமான வாகனச் சோதனை நடைபெறுகிறது. போலீஸாரை பாா்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிலா் தலைக்கவசம் அணிகிறாா்கள். தலைக்கவசத்தை முறையாக லாக் செய்வதில்லை. இது போலீஸாரை கண்டதும் தலைக்கவசம் அணியும் போக்காகவே தெரிகிறது.

காரைக்காலில் 40 சதவீத்துக்குள்ளானவா்களே தலைக்கவசம் அணிகின்றனா். போலீஸாா் தீவிரமான விழிப்புணா்வு மேற்கொள்கின்றனா். அதேவேளையில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து, அபராதம் விதிப்பும் நடைபெறுகிறது. எனவே தலைக்கவசம் அணிவதில் வாகன ஓட்டிகள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.