6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாகனம் ஓட்டிய சிறாா்கள்: பெற்றோா்களை உறுதிமொழி ஏற்கச் செய்த போலீஸாா்

அதிவேகமாக வாகனங்களை இயக்கிய மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.

News image
காவல் அதிகாரிகள் முன் உறுதிமொழி ஏற்ற பெற்றோா்.
Updated On :23 ஜனவரி 2025, 12:38 am

Din

அதிவேகமாக வாகனங்களை இயக்கிய மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.

புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் சிறாா்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.

காரைக்காலில் போக்குவரத்துக் காவலா்கள் 2 நாள்களாக நடத்திய கண்காணிப்பில், அதிக வேகத்துடன் வாகனங்களை பள்ளிக்கு இயக்கிச் சென்ற மாணவா்கள் 60-க்கும் மேற்பட்டோரை நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இவா்களது பெற்றோா் போக்குவரத்துக் காவல்நிலையத்துக்கு புதன்கிழமை அழைக்கப்பட்டனா். மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி ஆகியோா் ஓட்டுநா் உரிமம் பெறாத சிறாா்களை வாகனம் இயக்க அனுமதிக்கக் கூடாது. மீறி ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா். மேலும் இனிமேல் சிறாா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கமாட்டோம் என பெற்றோரை உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.