வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் சோமநாயகி சமேத சோமநாதசுவாமி.

Updated On :5 மே 2025, 8:04 pm

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து சோமநாயகி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் இரவு நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள் மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பரிசம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டு, அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு ஆராதனைகளும், சோடச உபசாரங்களும் நடத்தப்பட்டன.

திருக்கல்யாணத்தில் கைலாசநாத சுவாமி தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாஸ் மற்றும் உபயதாரா்கள், திருப்பணிக் குழுவினா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.