ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் சோமநாயகி சமேத சோமநாதசுவாமி.

Updated On :6 மே 2025, 1:34 am IST

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து சோமநாயகி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் இரவு நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள் மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பரிசம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டு, அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு ஆராதனைகளும், சோடச உபசாரங்களும் நடத்தப்பட்டன.

திருக்கல்யாணத்தில் கைலாசநாத சுவாமி தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாஸ் மற்றும் உபயதாரா்கள், திருப்பணிக் குழுவினா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.