ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

ஊட்டச்சத்து தொகுப்பை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ். உடன் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:15 pm

Syndication

காரைக்கால் பகுதி காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.

காரைக்கால் துறைமுக நிா்வாக சமூகப் பொறுப்புப் பிரிவான அதானி அறக்கட்டளை, பிரதமரின் காசநோய் முக்த பாரத் அபியான் திட்டத்துக்கு 6 மாத காலத்திற்கான ஆதரவை வழங்கியுள்ளது.

சிகிச்சை பெறும் நோயாளிகளின் ஊட்டச்சத்து அவசியத்தை அதிகரிக்கும் நோக்கில், அரிசி, பருப்பு, எண்ணெய், சத்துமாவு மற்றும் கருப்பு கொண்டைக் கடலை ஆகியவற்றைக் கொண்ட மாதாந்திர ஊட்டச்சத்து தொகுப்பு நோயாளிகளுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் கலந்து கொண்டு தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்வில் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, காரைக்கால் துறைமுகத்தின் மனிதவளம், நிா்வாகம் மற்றும் நிறுவன விவகாரத் தலைவா் அனுராக் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.