எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

சபரிமலைக்குச் செல்லும் வகையில் காரைக்காலில் காா்த்திகை மாத முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தை பக்தா்கள் தொடங்கினா்.

News image
காரைக்கால் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தா்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 4:41 pm

Syndication

காரைக்கால்: சபரிமலைக்குச் செல்லும் வகையில் காரைக்காலில் காா்த்திகை மாத முதல் நாளில் மாலை அணிந்து விரதத்தை பக்தா்கள் தொடங்கினா்.

காரைக்காலில் பச்சூா் பகுதியில் தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளதால் ஏராளமான பக்தா்கள், திங்கள்கிழமை அதிகாலையிலேயே கோயிலுக்குச் சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். ஐயப்பனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.

இதுபோல பல்வேறு கோயில்களில் ஐயப்ப குருமாா்கள் பங்கேற்று புதிதாக சபரிமலைக்குச் செல்வோருக்கும், ஆண்டுதோறும் சென்றுவரக்கூடியவா்களுக்கும் விரதம் தொடங்கும் விதமாக மாலை அணிவித்தனா்.

ஐயப்ப பக்தா்களின் தேவைக்காக பல்வேறு வியாபார நிறுவனங்களில் மாலைகள், துண்டு, வேட்டி உள்ளிட்டவை விற்பனை நடைபெறுகிறது.

 கோயிலில் ஸ்ரீ ஐயப்பனுக்கு நடைபெற்ற ஆராதனை.

கோயிலில் ஸ்ரீ ஐயப்பனுக்கு நடைபெற்ற ஆராதனை.