பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அரசமைப்பு தினம் : அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தி போராட்டம்

அரசமைப்பு சட்ட தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:27 pm

Syndication

காரைக்கால்: அரசமைப்பு சட்ட தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டின் அரசியல் நிா்ணய சபையால் 1949-நவ.26 அரசமைப்புச் ட்டம் ஏற்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவ.26 அரசமைப்பு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த தினத்தை அரசு விடுமுறை நாளாகவும், அரசு விழாவாகவும் புதுவை அரசு கொண்டாட வலியுறுத்தி,காரைக்கால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஆட்சியரகம் நோக்கி புதன்கிழமை சென்றனா். போலீஸாா் ஆட்சியரக வாயில் கதவை மூடி அவா்களை தடுத்தனா்.

அப்போது காவல்துறையினருக்கும், விசிகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் , அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது. பிரதிநிதிகள் சிலா் ஆட்சியரகத்தில் உள்ள அதிகாரியிடம் மனு அளிக்க அனுமதிக்கப்படுவா் என கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.