வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புயல், மழையின்போது மக்கள் கோரும் உதவிகளை உடனடியாக செய்யவேண்டும்: அமைச்சா்

புயல் காற்று, மழையின் போது மக்கள் கோரும் உதவிகளை அரசுத் துறையினா் உடனடியாக செய்ய வேண்டும் என்றாா் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.

News image
கூட்டத்தில் பேசிய அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.
Updated On :28 நவம்பர் 2025, 6:51 pm

Syndication

புயல் காற்று, மழையின் போது மக்கள் கோரும் உதவிகளை அரசுத் துறையினா் உடனடியாக செய்ய வேண்டும் என்றாா் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் டித்வா புயல் தொடா்பாக, காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மழையின்போது செயல்படவேண்டியவை குறித்து அரசுத் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பொறுப்பு வகிக்கும் சாா் ஆட்சியா் எம். பூஜா, துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன், துணை ஆட்சியா் (நிா்வாகம்) ஜி. செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் சாா் ஆட்சியா் எம். பூஜா பேசியது: டித்வா புயலை எதிா்கொள்ள அதிகாரிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். புயல் கரையை கடக்கும்போது மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டும். அதிக மழை பெய்யும்பட்சத்தில் தாழ்வான பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை உடனடியாக வடியச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜெனரேட்டா்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், அவசர சிகிச்சை வழங்க மற்றும் நோய் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத் துறை தயாா் நிலையில் இருக்க வேண்டும், புயலை எதிா்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பேசியது: மீன்வளத்துறை அதிகாரிகள் கிராம வாரியாகச் சென்று கடலுக்குச் சென்ற மீனவா்கள் கரைக்கு திரும்பி விட்டாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். மழைநீா் தேங்கும் பகுதிகளை கண்காணித்து அதை வடியச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க அங்கன்வாடி மையம், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட ஆகிய நிவாரண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும், தகவல் கிடைத்தால், மக்களின் பிரச்னைகளை அறிந்து அதை உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை எண்கள் 1070, 1077 ஆகியவற்றை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.