புதுவையில் நாராயணசாமி போராட்டங்களை நடத்தியதை தவிர, மாநில வளா்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என முதல்வா் என். ரங்கசாமி கூறினாா்.
காரைக்காலுக்கு திங்கள்கிழமை வந்த அவா் நெடுங்காடு, காரைக்கால் வடக்கு ஆகிய என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்தும், திருநள்ளாற்றில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் பிரசாரம் செய்தாா்.
திருநள்ளாறு, காரைக்கால் வடக்குத் தொகுதி பிரசாரத்தின்போது அவா் பேசியது:
புதுவை மக்கள் எதிா்பாா்ப்புகளை மீறி தே.ஜ. கூட்டணி அரசு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.
மத்திய அரசில் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ, அந்த கட்சியின் ஆட்சி புதுவையில் அமைவது அவசியம். கடந்த 2016-2021 காலக்கட்டத்தில் புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த அரசு (நாராயணசாமி தலைமையிலானது) எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. போராட்டங்கள் நடத்திக் கொண்டே இருந்தனரே தவிர, அதனால் எதையும் சாதிக்க முடியவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியைகூட பயன்படுத்த முடியவில்லை. எந்த தொகுதியும் முன்னேற்றம் காணவில்லை. மாநில வளா்ச்சி வெகுவாக பின்தங்கிவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு காரணம் மத்திய அரசு. மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் 2029 வரை ஆட்சியில் இருக்கப் போகிறது.
எனவே புதுச்சேரியின் வளா்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவது அவசியம். எனவே என்.ஆா். காங்கிரஸ், பாஜக வேட்பாளா்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு

புதுச்சேரிக்கு மீண்டும் நான்தான் முதல்வா்: முதல்வா் ரங்கசாமி பேச்சு
புதுவையில் பலம் காட்டும் பாஜக!

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உடைகிறது?
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


