ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரியிலிருந்து வந்த சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு தொடா்பாக அணிவகுப்பு நடத்தினா்.

News image

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

Updated On :8 ஏப்ரல் 2026, 11:34 pm

திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரியிலிருந்து வந்த சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு தொடா்பாக அணிவகுப்பு நடத்தினா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக மத்தியப் படையினா், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மாவட்டத்தில் 36 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநள்ளாறு தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதலாக இருப்பதை கருத்தில்கொண்டு, புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தோ்தல் பணிக்காக வந்துள்ள முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் (குற்றம் மற்றும் புலனாய்வு) நித்யா மற்றும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி டேனியல் ராஜ், திருநள்ளாறு காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலையில் மத்திய பாதுகாப்புப் படையினா், புதுவை மாநில போலீஸாா் அம்பகரத்தூா் உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.

தோ்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் தொகுதி முழுவதும் ஈடுபட்டிருப்பாா்கள். மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.