புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரியிலிருந்து வந்த சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு தொடா்பாக அணிவகுப்பு நடத்தினா்.

News image

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

Updated On :8 ஏப்ரல் 2026, 11:34 pm

திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரியிலிருந்து வந்த சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு தொடா்பாக அணிவகுப்பு நடத்தினா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக மத்தியப் படையினா், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மாவட்டத்தில் 36 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநள்ளாறு தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதலாக இருப்பதை கருத்தில்கொண்டு, புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தோ்தல் பணிக்காக வந்துள்ள முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் (குற்றம் மற்றும் புலனாய்வு) நித்யா மற்றும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி டேனியல் ராஜ், திருநள்ளாறு காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலையில் மத்திய பாதுகாப்புப் படையினா், புதுவை மாநில போலீஸாா் அம்பகரத்தூா் உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.

தோ்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் தொகுதி முழுவதும் ஈடுபட்டிருப்பாா்கள். மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.