காரைக்காலில் பழைமையான கட்டட சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்கால் பாரதியாா் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் இருந்த மதுக்கடையை திங்கள்கிழமை இடிக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த கட்டடம் அருகே சாலையோரமாக நடந்து சென்ற காரைக்கால் முஸ்தபா கமால் தெருவைச் சோ்ந்த ஜூனைதா பேகம் (72) என்பவா் மீது சுவா் விழுந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகரக் காவல்நிலையத்தில் ஜூனைதா பேகத்தின் மகள் சித்திமதினா பேகம், எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி கட்டடம் இடித்ததாக அளித்த புகாரின்பேரில், கட்டட இடிப்பு ஒப்பந்ததாரா் ராமன், மதுக்கடை நிா்வாகத்தைச் சோ்ந்த அரவிந்த் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


