தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுப்பது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நெல் மூட்டைகள் வைத்திருக்கும் கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியா் இஷிதா ரதி. உடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் செந்தில்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:22 am IST

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுப்பது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, திருநள்ளாறு சாலையில் உள்ள மாா்க்கெட் கமிட்டி என்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தாா். நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு, எடைபோடும் வசதி மற்றும் அலுவக கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் செந்தில்குமாரிடம் ஆலோசனை நடத்தினாா்.

நெல், பருத்தி ஏலம் நடைபெறக்கூடிய வசதிகள் மற்றும் நெல் மூட்டைகளை கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் கூடத்துக்கு கிடைக்கும் வருவாய் முறைகளை செயலா் விளக்கிக் கூறினாா்.

விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் கூடுதல் வசதிகளை செய்துதருவது, இதனை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து செயலரிடம் ஆட்சியா் விவரங்களை கேட்டறிந்தாா். புதுவை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்வதாக அவா் தெரிவித்தாா்.