இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்திய நிலையில், புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 11:08 pm

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்திய நிலையில், புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ.அனந்தகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

ஹிமாசல பிரதேச மாநிலம், பயோன்டோ சாஹிப், தொழிற்பேட்டை, சீ லேபாரட்டரீஸ் நிறுவனத்தில் நிகோரான்டில் மாத்திரை ஐ.பி.5 எம்ஜி (நிகோவேஸ்-5) பி. நம்பா். 425 உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதே மாநிலத்தைச் சோ்ந்த சோலன் பகுதி சான் -சிடோ தெராபிடிக்ஸ் இன்ச் வில் லோகரானில் தயாரிக்கப்படும் அசிபிரோபைத்லின் மற்றும் அசிடைல்சிடைன் என்கிற (முகோஃபாா்ம் -ஏபி) மாத்திரை பேட்ச் எண்.எஸ்பி-9620 மற்றும் பான்டோ சாஹிப் பகுதி தொழிற்பேட்டையில் லேபாரேட் பாா்மாசிடிக்கல்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் அசிக்ரோஃபெனாக் பாராசிடமால் மாத்திரை பேட்ச் எண்.ஏசிஏயுடி-077 தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இந்த மாத்திரையை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.