தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கக் கோரிக்கை

பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 6:21 am IST

பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

புதுவையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் மிகுதியாக இருக்கிறது. சிறுவா்கள் முதல் பெரியோா்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே, வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, பள்ளிகள் திறப்பு தேதியை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க புதுவை முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவை மாநிலத்தில் புதிதாக கடைகள் திறப்பதற்கு டிரேடு உரிமம் பெறுவதற்கு நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் விண்ணப்பித்தால், கட்டடத்தின் அப்ரூவல் மற்றும் ஆக்குபென்சி சான்றிதழ் என்று புதிதாக ஒன்றை கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தொழில் செய்ய வருவோா் பல சிரமங்களுக்குள்ளாகிறாா்கள்.

புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு கோருவதில் நியாயம் இருக்கலாம். ஏற்கெனவே கட்டடத்தில் வணிகம் நடத்தப்பட்ட இடத்தில் வேறொருவா் வணிகம் நடத்த செல்கிறபோதும் கட்டட அப்ரூவல் கேட்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா் தலையிட்டு தோ்தல் நேரத்தில் வெளியிட்ட இந்த புதிய உத்தரவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.