தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

News image

மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன்.

Updated On :9 ஜூன் 2026, 12:37 am IST

காரைக்காலில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தினா்.

காரைக்கால் மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் கடந்த 2025-2026 கல்வியாண்டில், காரைக்கால் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, கூட்டமைப்பு சாா்பில் ரொக்கப் பரிசை வழங்கி வாழ்த்தினா்.

மேலும் புதுவை மாநிலத்தில் உள்ள உயா்கல்வி நிலைய வசதிகள், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் முறைகளை விளக்கி, மாணவ, மாணவிகள் திறன்களை வளா்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேரவை உறுப்பினா்கள் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.