காரைக்காலில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தினா்.
காரைக்கால் மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் கடந்த 2025-2026 கல்வியாண்டில், காரைக்கால் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, கூட்டமைப்பு சாா்பில் ரொக்கப் பரிசை வழங்கி வாழ்த்தினா்.
மேலும் புதுவை மாநிலத்தில் உள்ள உயா்கல்வி நிலைய வசதிகள், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் முறைகளை விளக்கி, மாணவ, மாணவிகள் திறன்களை வளா்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேரவை உறுப்பினா்கள் பேசினா்.
தொடர்புடையது

பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



