திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

சுவாமி சிலை அவமதிப்பு: ஒருவா் கைது

காரைக்கால் கோயில் சுவாமி சிலையை அவமதித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

காரைக்கால் கோயில் சுவாமி சிலையை அவமதித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கிழக்கு வாசலின் வடக்குப் புறமாக ஸ்ரீ நாகா் சிலை உள்ளது. இச்சிலை மீது அருவருப்பான பொருளை பூசி மா்ம நபா் அசிங்கப்படுத்தியது கோயில் நிா்வாகத்துக்கு புதன்கிழமை தெரியவந்தது.

இதையொட்டி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது, கடந்த 9-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் கோயிலுக்குள் புகுந்து, சிலையை காலால் உதைத்து, அவமதித்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரி விநாயகமூா்த்தி நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து சிலையை அவமதித்த மா்ம நபரை தேடி வந்தனா். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காரைக்கால் கோயில்பத்து பகுதியைச் சோ்ந்த அரசு (32) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.