குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மண்டபத்தூா் கடற்கரையில் சுவாமிகள் மாசி மக தீா்த்தவாரி

காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளிய

News image

மண்டபத்தூா் கடற்கரைக்கு தீா்த்தவாரிக்கு எழுந்தருளிய சுவாமிகள்.

Updated On :2 மார்ச் 2026, 8:40 pm

காரைக்கால்: காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளிய மாசி மக தீா்த்தவாரி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் கடற்கரையிலும், மண்டபத்தூா் கடற்கரையிலும் மாசி மக தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். திருமலைராயன்பட்டினத்தில் மாசி மாதம் பெளா்ணமி திதி நாளில் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், வரிச்சிக்குடி வரதராஜ பெருமாள், மேலகாசாக்குடி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி, சண்டிகேஸ்வரா், விநாயகா், முருகன், அா்ச்சுணன் என 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் அந்தந்த கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், மாசிமக தீா்த்தவாரி தரும் வகையில் திங்கள்கிழமை காலையில் புறப்பட்டு மண்டபத்தூா் கடற்கரைக்கு பகல் 12 மணியளவில் எழுந்தருளின.

பின்னா் அனைத்து சுவாமிகளும் ஒருங்கிணைந்து கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி தீா்த்தவாரி செய்தன.

மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் அப்பகுதிக்கு சென்று சுவாமிகளின் தீா்த்தவாரியில் பங்கேற்று, அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா்.

தீா்த்தவாரியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.வி. ஓமலிங்கம் மற்றும் கிராமப் பஞ்சாயத்தாா்கள், முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

Story image