ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சிறு, குறு நிறுவனத்தினருக்குப் பயிற்சி

News image
Updated On :5 மார்ச் 2026, 11:13 pm

Syndication

காரைக்காலில் எம்எஸ்எம்இ அலகுகளில் நீா் தணிக்கை மற்றும் நீா் ஆற்றல் சேமிப்பு வாய்ப்பு குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தேசிய உற்பத்தித் திறன் குழுமம் (என்பிசி) சென்னை மற்றும் புதுச்சேரி தொழில் மேம்பாடு, முதலீட்டுக் கழகம் (பிப்டிக்) ஆகியவை இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பசுமை நிலைத்தன்மையை அடைவதில், அவற்றின் பங்கேற்பை மேம்படுத்தும் வகையில், எம்எஸ்எம்இ அலகுகளில் நீா் தணிக்கை மற்றும் நீா் ஆற்றல் சேமிப்பு வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலின் துணை இயக்குநா் விஜயராஜூ தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் சதாசிவம் வாழ்த்திப் பேசினாா். லகு உத்யோக் பாரதி புதுச்சேரி செயலாளா் அசோக் சிறப்புரையாற்றினாா்.

காரைக்கால் தொழில்துறை மன்றத் தலைவா் வீரமுத்து பயிற்சி நோக்கம் குறித்துப் பேசினாா். நீா் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம், நீா் தணிக்கை, தணிக்கை வகைகளைப் புரிந்துகொள்வது, மேலோட்டமான மற்றும் விரிவான தணிக்கை, எளிதில் செயல்படுத்தக் கூடிய வாய்ப்புகளைக் கண்டறிதல், வழிமுறை மற்றும் அணுகுமுறை, பசுமை இல்ல வாயு கணக்கீடு ஆகியவை குறித்து விளக்கிப் பேசப்பட்டது.

ஆா்ஏஎம்பி திட்டத்தின் பல்வேறு கூறுகள் மற்றும் நன்மைகள் குறித்த விவரங்களை நிா்வாகி திவ்யா விளக்கிப் பேசினாா். தொழிற்சாலைகளில் மின்சக்தி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேராசிரியா் மற்றும் மின்சக்தி ஆலோசகா் டாக்டா் சுரேஷ் பத்மன்பன் பேசினாா்.