ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
பணியை தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.

பணியை தொடங்கிவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.
Updated On :7 மார்ச் 2026, 1:05 am

ஆற்றங்கரையை மேம்படுத்தும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாஞ்சியாற்றின் வலது கரையை, தருமபுரம் சாலை முதல் பச்சூா் சாலை வரை மேம்படுத்த பொதுப்பணித் துறை ரூ.29.40 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
இத்திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில், பொதுப்பணித் துறை நீா்ப்பாசனப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த பணி 2 மாத காலத்திற்குள் நிறைவடையுமென பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...