தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

Syndication

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எள் சாகுபடி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்று, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

அகில இந்திய ஒருங்கிணைந்த எள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், மத்திய நிதி உதவியுடன் எள் சாகுபடி ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) தி.ராமநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, எண்ணெய் வித்துகளின் பங்கு மற்றும் விதைத் திட்டம் குறித்துப் பேசினாா்.

உழவியல் துறை தலைவா் பேராசிரியா் எஸ்.மாலா , காரைக்காலில் சாகுபடி செய்யும் எள்ளின் மகசூல் அதிகரிப்பு குறித்தும், எள்ளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

அகில இந்திய ஒருங்கிணைந்த எள் ஆராய்ச்சித் திட்ட அலுவலா் பேராசிரியா் பி.சரவணன், எள் சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து மற்றும் களை மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா். எஸ்.திருமேனிநாதன் நன்றி கூறினாா்.

80 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். முதுகலை மாணவா்கள் மஞ்சரி, கலைஸ்ரீ, மிஷோா் இக்னேஷியஸ், பொன் ராதிகா ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.