வீட்டு மனை உரிமை ஆணை வழங்கல்


ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.
மனைப்பட்டா இல்லாமல் குடியிருப்போா், மனைக்கான உரிமை ஆவணமில்லாததால் அரசின் சலுகைகள் உள்ளிட்ட பிற பயன்களை பெறமுடியாத நிலை இருக்கிறது.
இந்நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட திருவேட்டக்குடி பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை உரிமை ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, முதல்கட்டமாக 57 பயனாளிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை (ஆவணம்) வழங்கினாா்.
நிகழ்வில், ஆதிதிராவிடா் நலத்துறை அதிகாரிகள், என்.ஆா்.காங்கிரஸ் கட்சி பிரமுகா்கள், கிராமத்தினா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...